Wednesday, July 22, 2009

மலையக இளைஞர்களை விடுவிக்க நடவடிக்கை - அமைச்சர் வடிவேல் சுரேஷ்

யுத்தம் முடிவடைந்துள்ள இவ்வேளையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்ட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான மலையக இளைஞர்,யுவதிகளை விடுவிக்கும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பெருந்தோட்ட வைத்தியசாலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசும் போது பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

தோட்ட மக்களையும் கிராமிய மக்களையும் இணைக்கும் வகையிலான வேலைத்திட்டம் அரசினால் பொறுப்பேற்கப்பட்டு நவீன மயப்படுத்தப்பட்ட தோட்ட வைத்தியசாலைகளின் திறப்பு விழா நிகழ்வுகளுடனே ஆரம்பமாகியுள்ளன. தோட்ட வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்றதன் நோக்கமே அரசின் இலவச சுகாதார சேவைகளை பெருந்தோட்டத்துறை மக்களும் பெறவேண்டுமென்பதற்கேயாகும்.
அரசின் அந்நோக்கம் தற்போது நிறைவேறி கொண்டிருக்கின்றது. தோட்ட வைத்தியசாலைகள் அரசினால் பொறுப்பேற்கப்பட்டு பெருந்தோட்ட மக்களுக்கு சிறந்த சேவைகள் கிடைக்கவேண்டுமென்ற எனது கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்ததையடுத்தே திட்டத்தினை நடைமுறைப்படுத்தினார்.
இரண்டரை வருடங்களுக்குள் 50மலையக பெருந்தோட்ட வைத்தியசாலைகளை முதற்கட்டமாக அரசினால் பொறுப்பேற்று அவ்வைத்தியசாலைகள் புனரமைக்கப்பட்டு நவீன மயப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் புனரமைப்பு பணிகளுக்கென பெருந்தொகை நிதியினையும் வழங்கப்பட்டுள்ளது..கோடிக்கணக்கான ரூபா செலவில் பதுளை மாவட்ட பெருந்தோட்ட வீதிகள் அமைத்தலும் ஏற்கனவே இருந்த வீதிகளை புனரமைத்தலுமான வேலைத்திட்டத்தினை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்ப் பாடசாலைகள் பலவற்றிற்கும் கணினித் தொகுதிகளையும் ஆலயங்களுக்கான உபகரணத் தொகுதிகளையும் வழங்கியுள்ளது என்றார்
ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் 2008க்கான வருடாந்த தேயிலை மதிப்பீடு

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தேயிலை தரகுத் துறைசார்ந்த துணை நிறுவனமான ஜோன் கீல்ஸ் நிறுவனம், அண்மையில் அதன் 2008ம் ஆண்டுக்கான தேயிலை மதிப்பீட்டை வெளி யிட்டுள்ளது.அதன் முதற்பிரதியானது தேயிலை சபையின் தலைவர் லலித் ஹெற்றியாச்சியிடம் வழங்கப்பட்டது.
தேயிலை துறையின் மீது பூகோள பொருளாதாரம் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி ஆராயும் அதேவேளை, அது மேற்கு, நுவரெலியா, ஊவா, சி.டி.சி. லோ குரொன், டஸ்ட் மற்றும் பிற தரங்களுக்கான தேயிலைச் சந்தைகள் மற்றும் உலகளாவிய உள்ளுர் தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பற்றியும் இவ்வறிக்கை விரிவாக எடுத்துரைக்கிறது.
இவ்வறிக்கையின் படி, கடந்த ஆண்டில் உலகளாவிய அளவில் தேயிலையின் விலை யில் முன்னெப்போதுமில்லாத விலைத் தளம்பல் ஏற்பட்டிருந்தது. கென்யா போன்ற பிரதான தேயிலை உற்பத்தி நாடுகளில் தேயிலை வழங்கலில் ஏற்பட்ட கட்டுப்பாடு காரணமாக, இலங்கையின் தேயிலை விலை வரலாறு காணாத உயரங்களைத் தொட்டது.
உலக பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு ஏலத்தில் கேள்விகோருநர் இல்லாமையினால் பெருமளவான தேயிலை விற்பனை நடைபெறவில்லை. தேயிலை தொழிற் றுறையில் ஒரு நம்பகமற்ற நிலை தோற்றுவிக்கப்பட்டது. அது வழங்கற் சங்கிலி முழுவதும் ஒரு பண ஓட்டத்தில் நெருக்கடியைத் தோற்று வித்தது. விற்கப்படாத தேயிலையின் வீதமானது தேயிலை சபையின் அனுசரணையால் குறைக்கப்பட்ட அதேவேளை, உற்பத்தியாளருக்கு தேவையாக இருந்த பணஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.
2008ல் உலக தேயிலை உற்பத்தி 3.7 பில்லியன் கிலோ. இது 2007 ஐ விட 12 மில்லியன் கிலோக்கள் குறைவு. கென்யா தேயிலை உற்பத்தியில் குறிப்பிடத்தகுந்த இறக்கம், அதாவது முதல் ஆண்டைவிட 24 மில்லியன் கிலோக்கள் குறைவாக இருந்தது.
மாறாக சீனாவும் இலங்கையும் முறையே 20 மில்லியன் கிலோ மற்றும் 14 மில்லியன் கிலோ தேயிலையை அதிகமாக உற்பத்தி செய்திருந்தன. இந்தியாவில் 36 மில்லியன் கிலோக்களை அதிகமாக உற்பத்தி செய்திருந்தது.

2008ல் இலங்கையின் தேயிலை உற்பத்தி உச்சத்தை 318.7 மில்லியன் கிலோவைத் தொட்டது. 2005 ல் உற்பத்தியான 317.2 மில்லியன் கிலோவை விட இது அதிகம். அதாவது 2007 ஐ விட 4.6 வீதம் அதிகம். கடந்தாண்டு மதிப்பீட்டின்படி ஹைகுரோன் உற்பத்தி 16 வீதம் அதிகமாகவும் மீடியம் குரோன் 10 வீதம் குறைவாகவும், லோ குரோன் 4 வீதம் உயர்வாகவும் அமைந்திருந்தது.
உலக ஏற்றுமதியானது முந்திய வருடத்தின் 71 மில்லியன் கிலோவைவிட இவ்வாண்டு 1.6 மில்லியன் கிலோவாக அமைந்தது. 2007 ஆண்டைவிட 11.6 வீதம் அதிகமாக 383.4 மில்லியன் கிலோவுடன் கென்யா மிகப்பெரிய ஏற்றுமதியாளர் என்ற நிலையை தக்க வைத்துக் கொண்டது.
இலங்கை இரண்டாவது பெரிய ஏற்றுமதியாளராக விளங்கியது. 2008ல் இந்தியா, சீனா, இந்தோனேசியா போன்றவை ஏற்றுமதியில் ஏற்றத்தை காட்டிய அதே வேளை, ஆஜன்டினா, உகன்டா, தன்சானியா, மாலாவி போன்றவை ஏற்றுமதியில் இறக்கத் தைக் கண்டிருந்தன.
இலங்கையின் 2008க்கான தேயிலை ஏற்றுமதி 319.3 மில்லியன் கிலோவை விட அதில் 299.2 மில்லியன் கிலோவைவிட தேறிய ஏற்றுமதியாக இருந்தது. இலங்கைத் தேயிலைக் கான பிரதான ஏற்றுமதி மையங்கள் எனும் நிலையை ரஷ்யா, ஈரான், சிரியா, மற்றும் துருக்கி என்பன தக்க வைத்துக்கொண்டன. ஏற்றுமதி வருமானமும் 2007 ஆண்டுக்கான 113.5 பில்லியன் ரூபாவைவிட 2008ல் 137.5 பில்லியன்களாக அமைந்திருந்தது