Monday, March 28, 2016

சுயநலவாத முன்னெடுப்புகளால் தொழிற்சங்க நலன்கள் பாதிப்பு

அர­சி­யலும் தொழிற்­சங்­கமும் இணை­யும்­போது ஒரு பல­மான சக்தி உரு­வெ­டுக்க வேண்டும். ஆனால் மலை­ய­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் இது சாத்­தி­யப்­ப­ட­வில்லை. சுய­ந­ல­வாத முன்­னெ­டுப்­புகள் கார­ண­மாக தொழி­லா­ளர்­களின் நலன்கள் பாதிப்­ப­டைந்­துள்­ளன என்று சிரேஷ்ட கலா­நிதி ஏ.எஸ். சந்­தி­ரபோஸ் தெரி­வித்தார். சம­கால தொழிற்­சங்­கங்­களின் போக்­குகள் குறித்து கருத்து வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்; மலை­யக மக்கள் இன்னும் பல்­வேறு உரி­மை­களைப் பெற்­றுக்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. நிறைவு செய்­யப்­ப­டாத நிலையில் தேவை­களும் இன்னும் அதி­க­முள்­ளன.
இவற்றைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான முனைப்­பு­களும் அழுத்­தங்­களும் உரி­ய­வாறு இடம்­பெ­று­கின்­ற­னவா? என்­பதில் திருப்தி கொள்ள முடி­ய­வி­லலை. இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் மலை­யக தொழிற்­சங்க வர­லாற்றில் முக்­கி­ய­மான இடத்­தினை பெறு­கின்­றது. பல தொழிற்­சங்­கங்­க­ளுக்கு முன்­னு­தா­ர­ண­மா­கவும் இது விளங்­கி­யுள்­ளது. சாதா­ரண தொழி­லா­ளர்­களும் இத் தொழிற்­சங்­கத்தில் முக்­கி­ய­மான பத­வி­களில் இருந்­துள்­ளனர். தொழி­லா­ளர்­களின் சக்­தியை மையப்­ப­டுத்தி பல்­வேறு வேலைத்­திட்­டங்­க­ளையும் இ.தொ.கா. முன்­னெ­டுத்­தது.
மலை­யக மக்கள் பிர­ஜா­வு­ரி­மை­யையும் வாக்­கு­ரி­மை­யையும் பெற்றுக் கொண்­டதைத் தொடர்ந்து மலை­யக தொழிற்­சங்­கங்கள் நிலை­மாற்றம் பெற்­றன.
இத் தொழிற்­சங்­கங்கள் அர­சியல் ஸ்தாப­னங்­க­ளா­கவும் உரு­மாற்றம் பெற்­றன. அர­சி­யலும் தொழிற்­சங்­கங்­களும் இணை­கையில் ஒரு பல­மான சக்தி உரு­வாக வேண்டும். ஆனால் மலை­ய­கத்தைப் பொறுத்­த­வ­ரை­யிலும் இது சாத்­தி­யப்­ப­ட­வில்லை. தொழி­லா­ளர்­க­ளுக்கு உரி­மை­களைப் பெற்றுக் கொடுக்க வேண்­டிய தொழிற்­சங்­கங்கள் நிலை­மாறி செயற்­ப­டு­வ­த­னையே அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. இலங்­கையின் தொழில் வழக்­கு­களில் மலை­யக தொழிற்­சங்­கங்கள் ஒரு காலத்தில் சிம்­ம­சொப்­ப­ன­மாக விளங்­கின. தொழிற்­சங்கம் என்றால் ஒரு அச்ச நிலை மேலோங்கிக் காணப்­பட்­டது. ஆனால் இன்று அந்த நிலை­மையை காண முடி­ய­வில்லை. தொழி­லா­ளர்­களின் சாதா­ர­ண­மான பிரச்­சி­னை­களைக் கூட தீர்த்து வைக்க முடி­யாத வெற்­றி­யினை ஏற்­ப­டுத்திக் கொடுக்க முடி­யாத நிலையில் சம­கால தொழிற்­சங்­கங்கள் காணப்­ப­டு­வது வருந்­தத்­தக்க விட­ய­மாக உள்­ளது.
தொழிற்­சங்­கங்­களை உரு­வாக்­கு­வதன் நோக்­கமே அர­சியல் களத்­திற்­குச்­செல்ல ஆயத்­தப்­ப­டுத்­து­வ­தாக இப்­போ­துள்­ளது. தொழிற்­சங்­கத்தை மையப்­ப­டுத்தி அர­சி­ய­லுக்­குச்­செல்லும் முனைப்­புடன் பலர் செயற்­ப­டு­கின்­றனர். இதில் வெற்­றியும் கண்­டுள்­ளனர். எனினும் அர­சி­ய­லுக்­குச்­சென்ற பின் தொழி­லா­ளர்­க­ளுக்கு இவர்கள் எந்­த­ளவு நன்மை செய்­கின்­றனர் என்­பது கேள்­விக்­கு­றி­யே­யாகும். தொழிற்­சங்­கங்­க­ளுக்கு அதி­க­ளவில் சந்­தாப்­பணம் வந்து சேரு­கின்­றது. அர­சி­யலில் தோல்­வி­ய­டைந்­தாலும் வெற்­றி­ய­டைந்­தாலும் தமக்­கு­ரிய வரு­வா­யினை தொழிற்­சங்­க­வா­திகள் பெற்றுக் கொள்­கின்­றனர். இதனால் தொழி­லா­ளர்­களின் பிரச்­சி­னை­களை இவர்கள் பெரி­தா­கக்­கண்டு கொள்­வதே கிடை­யாது.
இலங்­கையை பொறுத்­த­வ­ரையில் தொழிற்­சங்­கங்­க­ளுக்கு சந்­தாப்­பணம் பெரி­ய­ளவில் கிடைக்­கின்­றது. 60 ரூபாவில் இருந்து 145 ரூபா வரை­யிலும் தொழிற்­சங்­கங்­க­ளுக்கு சந்­தாப்­பணம் கிடைக்­கின்­றது. இது இன்னும் அதி­க­மா­கவும் இருக்­கலாம். தொழிற்­சங்­கங்கள் இந்த வரு­வாயை மையப்­ப­டுத்தி தம்மை வளர்த்­துக்­கொள்­வதில் அக்­கறை காட்­டு­கின்­றன. தேர்தல் காலங்­களில் அர­சி­யல்­வா­தி­களின் பொய்­யான வாக்­கு­று­தி­களை நம்பி மக்கள் வாக்­க­ளிக்­கின்­றார்கள். எனினும் தேர்­தலின் பின்னர் பல அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும் பொய் முகத்­தைக்­கண்­டு­கொள்­ளக்­கூ­டி­ய­தாக உள்­ளது.
இலங்­கையில் பல்­வேறு தொழிற்­சங்­கங்கள் உள்­ளன. குறிப்­பாக வைத்­தியர் தொழிற்­சங்கம், ஆசி­ரியர் தொழிற்­சங்கம், பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யாளர் தொழிற்­சங்கம், விவ­சா­யி­களின் தொழிற்­சங்கம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இத் தொழிற்­சங்­கங்கள் தங்­க­ளது நிவா­ர­ணங்­களைப் பெற்­றுக்­கொள்ள தேசிய ரீதியில் செயற்­ப­டு­கின்­றன. ஆனால் மலை­யக தொழிற்­சங்­கங்கள் தேசிய ரீதி­யாக செயற்­பட முடி­யாத நிலையில் உள்­ளன. தொழி­லா­ளர்­களின் நலன்­க­ளுக்கு எதனைச் செய்ய வேண்டும் என்ற விழிப்­பு­ணர்வு இல்­லா­மையே மலை­யக தொழிற்­சங்­கங்­களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும் என்றார்.